Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். திருமலைக் கலாமன்றம் தவக்காலத்தை முன்னிட்டு வருடாவருடம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகையான 'கடவுள் வடித்த கண்ணீர்' என்ற தவசு நாடகத்தை இம்முறை திருப்பாடுவின் காட்சியாக எதிர்வரும் 12ஆம் 13ஆம் 15ஆம் 16ஆம் 17ஆம் திகதி;களில் திருமலைக் கலாமன்ற வெளியரங்கில் மாலை 6.45 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
இந்த நாடக ஆற்றுகைக்கான எழுத்துருவினை யாழ். திருமலைக் கலாமன்ற இயக்குனர் அருட்திரு நீ.மரியசேவையர் இயக்கியிருந்தார். இதற்கான நெறியாள்கையினை யாழ். திருமலைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் ஜோன்சன் ராஜ்குமார் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நாடக ஆற்றுகை வெறும் பார்த்துச் செல்வதற்கான அல்லவென்பதுடன், பக்திப்பரவசமான இயேசு நாதரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்தியம்பும் ஒரு வரலாற்று காவியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .