Suganthini Ratnam / 2011 ஜூன் 16 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்திலுள்ள கிராம அலுவலர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு வசதியாக கிராமங்களில் அலுவலகங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனொரு நடவடிக்கையாக வலிவடக்கிலுள்ள கிராம அலுவலர்களுக்கு அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட கிராம அலுவலர்களுக்கிடையே நடைபெற்ற அலுவலக முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்ற கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பின்னர் ஏனைய இடங்களில் கடமையாற்றும் கிராம அலுவலர்களுக்கும் கட்டம் கட்டமாக அலுவலகங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் யாழ். அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025