Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 19 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில். வீதி விஸ்தரிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதால் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.
கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சி ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 21,24,26 ஆகிய தினங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோக தடை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 22, 25, 27 ஆகிய தினங்களில் காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, தெற்கு, மயிலங்காடு பிரதேசத்தின் ஒரு பகுதி, ஈவினை பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதுடன் 23ஆம் கொட்டடி, நாவாந்துறை, மீனாட்ச்சிபுரம், காக்கைதீவு ஆகிய இடங்களிலும் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025