Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழில், 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, திருநெல்வேலி பிராந்திய வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களப் பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார்.
தற்போது வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியானது மேலும் 18 மாதங்களுக்குத் தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது
யாழில், கடந்த இரண்டு நாள்கள் மட்டும் 90.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று 8.30 மணி வரை 55.4 மில்லிமீற்றர் மழை வீ்ச்சியும் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 2 30 மணி வரையில் 22.7 மழைவீழ்ச்சியும் அச்சுவேலிப் பகுதியில் 92.9 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. அதேபோல, தெல்லிப்பளை பிரதேசத்தில் 84.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த வருடம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இன்று வரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 343.9 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளது.
35 minute ago
42 minute ago
48 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
48 minute ago
48 minute ago