எம்.யூ.எம். சனூன் / 2017 ஜூலை 17 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் நகரிலுள்ள வளங்களை சரியாக சமூக மயமாக்களுக்கு பயன்படுத்தப்படவேண்டும் எனும் நோக்கில், புத்தளம் நகரில் புதிய சமூக சேவை அமைப்பொன்று உதயமாகியுள்ளது.
அரசியலுக்கு அப்பாற்பட்டதான இந்த புதிய அமைப்புக்கான முதல்நாள் கூட்டம், புத்தளம் 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள தைக்கா பள்ளி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் இளைஞர் விவகாரம், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .