Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா - மன்னார் வீதி, பூவரசன்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதான தாளிக்குளத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் சத்தியரூபன் என்பவர் மரணமாகியுள்ளார்.
மன்னாரிலிருந்து வந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதை அடுத்தே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இவர், படுகாயங்களுக்கு உள்ளான நிலையிலேயே மரணமாகியுள்ளார்.
இவரது சடலம் மரணவிசாரணையின் பொருட்டு வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
44 minute ago