Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் நடைபெறவிருந்த வடமாகாண தமிழ் இலக்கிய விழா பிற்போடப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமையும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் வடமாகாண தமிழ் இலக்கிய விழா நடைபெறவிருந்தது. இவ்விழாவை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே பிற்போடப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவிருந்தார். இவ்விழா நடைபெறவிருந்த 7ஆம் 8ஆம் திகதிகளில் அவரால் இவ்விழாவில் கலந்துகொள்ளமுடியாததன் காரணமாக இவ்விழா பிற்போடப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
வடமாகாண தமிழ் இலக்கிய விழாவை மன்னார் மாவட்டத்தில் நடத்துவதற்கு கடந்த 2 வருடங்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதற்கு தொடர்ந்து தடங்கல் ஏற்பட்டு வருகின்றன.
26 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago