Princiya Dixci / 2016 மார்ச் 31 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது இடங்களில் இடம்பெறும் வைபவங்களில் சிலர் சத்தம் செய்யாது அமைதியாக இருங்கள் எனக் கூறுபவர்கள், மக்கள் அமைதியாகிவிட்டாலும் அவர்கள் மட்டும் பேசிக்கொண்டேயிருப்பார்கள்.
மேலும், ஆலயங்களில் மக்கள் கூடுதலாக இருந்தால், யாரோ ஒருவர் வருவார் எல்லோரும் விலத்துங்கள் விலத்தி ஒரு ஓரமாகப் போங்கள் எனச் சொல்லிக் கொண்டே, தன்னையும் தன்னைச் சார்ந்தோர்களையும் முன்வரிசையில் அமர்த்திவிட்டு மௌனமாகி விடுவார்.
மக்கள் கூடும் இடங்களில் அழையா விருந்தாளிபோல் வந்து அட்டகாசம் செய்பவர்கள், சுயநலநோக்குடன் செயலாற்றும் நபர்களைக் கண்டால் மக்கள் வெறுப்புடன் நோக்குவதைப் பற்றிக் கவலைப்படவேமாட்டார்கள்.
சுயநல எண்ணங்களுடன் தலைமைப்பதவியை விரும்பும் நபர்களுக்கு, பிறர் நலன்பற்றி கரிசனமும் கிடையவே கிடையாது.
சபையில் கண்ணியமுடன் இயங்கவேண்டும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
1 hours ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Jan 2026