J.A. George / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவை மாவட்டம் குனியமுத்துார் பகுதியை சேர்ந்தவர் மேஜிக் நிபுணர் டிஜோ வர்கீஸ். இவர் கடந்த 25 ஆண்டுகளாக மேஜிக் செய்து வருகிறார். இவர் மேஜிக் உலகில் தனக்கென தனி அடையாளம் ஏற்படுத்தி வருகிறார்.
இவர் கண்களை கட்டிக்கொண்டு அபாயகர மேஜிக்குகளை செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டு என பல்வேறு உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அளவில் முதன்முறையாக இவர் புனேவில் நடைபெற்ற விழாவில் IERCT எனும் இந்திரபிரஸ்தா எஜுகேஷனல் ரிசர்ச் சேரிட்டபிள் டிரஸ்ட்டின் விருதை இவர் தற்போது பெற்றுள்ளார்.
புனேவில் இதற்கான விருது வாங்கி கோவை விமான நிலையம் வந்த இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டிஜோ வர்கீஸ் பேசுகையில், மேஜிக் கலையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி இருக்கிறேன்.
இதுவரை உலகளவில், 1 மணி நேரம், நான்கரை மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து வேகமாக மேஜிக் செய்து சாதனை செய்தேன். தற்போது 8 மணி நேரம் தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டு மேஜிக் செய்து சாதனை செய்துள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.
31 minute ago
32 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
50 minute ago
56 minute ago