2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வென்னப்புவ பிரதேசத்தில் ஒருவர் கொலை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாமடம், லுணுகம பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த  முச்சக்கரவண்டிச் சாரதியான 20 வயதான  இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்று இவரை  தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான இவர்; படுகாயங்களுடன் பிரதேசவாசிகளால் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த நபரின் முச்சக்கரவண்டி தாக்குதல் இடம்பெற்ற இடத்திலேயே காணப்பட்டதுடன், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .