J.A. George / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு நுரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
டீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது.
இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது. இதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது.
இது கொரோனா வைரஸ் தொற்று தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
இந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
12 minute ago
1 hours ago
4 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
4 hours ago
17 Jan 2026