2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகின் மிகபெரிய சமாதான புறா

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


1.2 மில்லிய் பொத்தான்களை கொண்டு உலகின் மிகப்பெரிய சமாதான புறா வடிவமைக்கப்பட்டுள்ளது. 

டுபாயில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சமதான புறா கொடியானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கொடியில் உள்ள நிறங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

19x9 மீட்டர் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சமாதான புறா பூஜிப் கலிஃபா வளாகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23-24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது சமாதான மற்றும் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு இதன் விழா ஏற்பாட்டுக் குழு இப் பிரமாண்ட சமாதான புறா அடங்கிய கொடியை இவ்விடத்தில் பறக்கவிட்டுள்ளது.

இச்சமாதான புறாவை ஈராக்கின் சிறந்த விளையாட்டு வீரரான பரீட் லப்டா (வயது 33) என்பவரே வடிவமைத்துள்ளார். நல்லெண்ண தூதுவரும் சமாதான பிரசாரகாரருமான பரீத் டுபாயிலுள்ள பாடசாலை சிறுவர்களை இணைத்துகொண்டு இப்புறாவை வடிமைத்துள்ளார்.

மேற்படி விளையாட்டு வீரரை உள்ளடக்கிய குழுவினர் புறாவை வடிவமைக்கும் செயற்பாட்டை கடந்த  2 ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர். இதனை முற்று முழுதாக வடிவமைப்பதற்கு 7 நாட்கள் சென்றுள்ளன.

விளையாட்டு மற்றும் சமாதான நிகழ்வு நடைபெறும் தினத்தில் இப்புறாவிற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • khan Monday, 11 March 2013 10:20 AM

    என்னுடைய வாழ்துக்கள்.

    Reply : 0       0

    Mohd Munas Sunday, 19 May 2013 01:26 PM

    இச்சமாதான புறாவை விட்டாவது வரட்டும் சமாதானம் நம் இலங்கைக்கு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .