Editorial / 2020 மே 29 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான்
இராணுவத்தினரின் பாதுகாப்புக் காவலரண்களில் தானாகவே வீதித் தடைகளை ஏற்படுத்தி, வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான கண்டுபிப்பு ஒன்றை, மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அஹமட் கண்டுபிடித்து, சாதனை புரிந்துள்ளார்.
இதன்மூலம், பாதுகாப்பு தரப்பினரின் சமிஞ்சைகள், வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள், சாரதிகளை மனிதவலு அற்று, நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்தப் புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து, அறிமுகப்படுத்தியுள்ளார்.
இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன், கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் “சமூக இடைவெளியை பேணக்கூடிய நவீன ஸ்மாட் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்” ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
39 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
1 hours ago