Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 பெப்ரவரி 18 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் T-56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய 14 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவை நேற்று (17)காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடற்கரைப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தோட்டாக்களை கண்டெடுத்தனர்.
இதில் 12 தோட்டாக்கள் இதுவரை பயன்படுத்தப்படாதது என்றும் 2 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது.
கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago