2025 மே 15, வியாழக்கிழமை

கருணா அம்மானின் பதாதைகள் எரிப்பு

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா அம்மான்) ஆதரவு தெரிவித்து,  கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட  விளம்பர பதாதைகள், இனந்தெரியாதவர்களால் இன்று (10)  எரியூட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்பாறை -  கல்முனை வாழ் இளைஞர்கள், திகாமடுல்ல தேர்தல் தொகுதியில், கப்பல்  சின்னத்தில் போட்டியிடும் கருணா அம்மானுக்கு 35 அடி நீளமான பதாதைகளை, முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர்.

இந்தப் பதாதைகளே ஆங்காங்கே எரியூட்டப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .