Princiya Dixci / 2021 மார்ச் 04 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை – உஹனை பகுதியில் புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக உஹனை பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டுவதாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சுற்றி வளைப்பை மேற்கொண்டு இவர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (03) கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேக நபர்கள், அம்பாறை – உஹனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தனியார் நிறுவனமொன்றுக்காக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
9 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Feb 2026
02 Feb 2026