Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 05 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை மின்சார சபையின் அம்பாறை கிறீட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் இடம்பெறவிருப்பதால் எதிர்வரும் 9ஆம் சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு அமுலில் இருக்கும் என அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி அம்பாறை நகர், கெமுனுபுர, சுதுவெல்ல, கொண்டவட்டுவான், பறகஹவெல, ஹிமிதுராவ, கலஹிற்றியாகொட, நாமல்ஓயா, இங்கினியாகல, பதியத்தலாவ, உகன, கொணாகொல்ல, பியங்கல, 69ஆம் சந்தி, தம்பிட்டிய, மகா ஓயா, சேரங்கட, பதியத்தலாவ, நவகங்கொட, வளத்தாப்பிட்டி, மல்வத்த, வீரகொட, மத்திய முகாம், 11ஆம் கொலணி, 13ஆம் கொலணி, 5 ஆம் கொலணி, 17 ஆம் கொலணி, 21ஆம் கொலணி ஆகிய பிரதேசங்களில் மின் வெட்டு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டுர், சங்கர்புரம், கணேசபுரம், பெரியபோரதீவு, கோவில்போரதீவு, அம்பிளாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, தும்பங்கேணி, திக்கோடை, 39ஆம் கிராமம், தாந்தாமலை, மகளூர், எருவில், சிவபுரம், குருமன்வெளி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, மகிழத்தீவு, முதலைக்குடா, முனைத்தீவு, களுதாவளை, தேத்தாதீவு, செட்டிப்பாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்ப்பு மற்றும் தாழங்குடா ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்குமென அம்பாறை பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்ததுள்ளது. பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago