2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)
இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் கல்முனை, நாவிதன்வெளிப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நாவிதன்வெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சவளக்கடை கிராமத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த 52 வயதுடைய சம்சுல் லெவ்வை அப்துல் சலாம் என்பவர் கிட்டங்கி ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி ஸ்தலத்தில் மரணமாகியுள்ளார்.

குடும்பத் தலைவரான சம்சுல் லெவ்வை அப்துல் சலாம் 5 பிள்ளைகளின் தந்தையுமாவார்.

இன்று காலை நாவிதன்வெளிப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5