2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பெரிய முகத்துவாரம் புதிய பாலத்திற்கு அருகில் வெள்ளநீர்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், தம்பட்டை பகுதியிலுள்ள பெரிய முகத்துவாரம் புதிய பாலத்துக்கான நிர்மாண வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பாலம் நிர்மாணிக்கப்படும் இடத்திற்கு அருகில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.  

இதனால், இப்பாதையூடாக  பயணிப்போர் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பாலம் நிர்மாணிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் ஒருபுறம் கடலும், மறுபுறம் குளமும் அமைந்துள்ளன.

பல தடவைகள்  கடல்நீர்  நிலத்துக்குள் புகுவதால், இவ்வாறு நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .