A.P.Mathan / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலகம் நடத்திய 'இஸ்லாமிய கலை, கலாசார அம்சங்கள் தொடர்பான மாநாடும் கலாசார நிகழ்ச்சிகளின் அரங்கேற்றமும் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் சிறப்பு அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், இஸ்லாமிய கலை, கலாசார அம்சங்கள் பல மேடையேற்றப்பட்டதோடு, அறிஞர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.



4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025