2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

Super User   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்னவின் அழைப்பினையேற்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அம்பாறை பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

வைத்தியசாலையின்  புதிய நோயாளர் விடுதிக்கட்டடிடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சத்திரசிகிச்சைக்கு பின் பாராமரிப்பு வாட்த் தொகுதி மற்றும் தலசீமியா சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றினை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்தார்.

அம்பாறை பொது வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்டதுடன், சிகிச்கைப் பெற்று வரும் நோயாளர்களின் குறைகளையும் விசாரித்தார்.

அம்பாறை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜெயசிங்க தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.சுபையிர், விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜீத் மெண்டிஸ், சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வைத்தியசாலையின் பணிபுரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .