Super User / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகர சபையின் 2011ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
மாநகர முதல்வர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவின் முதலாவது வரவு செலவுத்திட்டமான 2011ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் இன்று திங்கட்கிழமை காலை மசூர் மௌலானாவால் சமர்ப்பிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டிற்கான உத்தேச வருமானமாக பத்துக்கோடி நாற்பத்தையாயிரத்து இருபத்தைந்து ரூபாவும், உத்தேச செலவாக பத்துக்கோடி நாற்பத்தி மூவாயிரத்து நானூற்றி நாற்பது ரூபாவும் என அறிவிக்கப்பட்டது.
இம்முறை 19 உறுப்பினர்களின் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 19 இலட்சம் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago