Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன், எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக, சொரி கல்முனை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இன்று அதிகாலை இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் வீட்டினுள் இருந்த வேளையிலே வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய அவர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்றவுடன் நாவிதன்வெளி பிரதேச தவிசாளர் கலையரசன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான வடிகான்களை சுத்தம் செய்யுமாறு பணித்துள்ளார்.
இதேவேளை, அம்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரையோர பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம், அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துரை, நாவிதன்வெளி, கல்முனை, பாண்டியிருப்பு போன்ற பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
07 Jun 2025