Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 04 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கல்முனை மருதமுனை பிரதேசத்தில் கணினி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மருதமுனைப்பிரதேசத்திலுள்ள மேற்படி கணினி விற்பனை நிலையம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி உடைத்து கணினி மற்றும் இலத்திரனியல் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திங்கள் கிழமை மாலை 6.00 மணியளவில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டதாகவும் சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago