Super User / 2011 ஜனவரி 06 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்முனையில் ஏற்பாடு செய்துள்ளது.
அமைதியான முறையில் இடம்பெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் பி.எம்.ஏ.காதர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், இனிமேலும் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளன தலைவர் கலாபூஷனம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டு மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025