Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 மே 14 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித உம்றா கிரியை மேற்கொள்வதற்காக 10 நாட்கள் பக்கேஜ் என்று அறிவித்து 7 நாட்கள் பக்கேஜாக மாற்றி பயண ஏற்பாட்டாளர் மோசடி செய்ததாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கல்முனையை சேர்ந்த உம்ரா முகவர் நிறுவனமொன்று புனித உம்றா கிரியை மேற்கொள்வதற்காக 10 நாட்கள் பக்கேஜ் என்று அறிவித்து யாத்திரிகர்களிடம் 85,000 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த பயண ஆரம்ப தினத்தன்று மாபொல பள்ளிவாசலில் வைத்து யாத்திரிகர்களிடம் வழங்;கப்பட்ட விமான டிக்கெட்டில் 7 நாட்களின் பின்னர் நாடு திரும்புவதற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக குறித்த உம்ரா முகவர் நிறுவனத்தின் உரிமையாளரிடம் வினவியதற்கு சவூதி அரேபியா சென்ற பின் இலங்கை திரும்பும் திகதியை மாற்றி தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் நாடு திரும்பும் திகதியை மாற்றி தந்தால் தங்களின் சொந்த பணத்தி;ல தான் தங்க வேண்டும் என சவூதி அரேபியாவில் அவர் தெரிவித்தார்.
பயணத்தை ஏழு நாட்களாக மாற்றியதால் மிகுதி பணத்தை மீள செலுத்துமாறு யாத்திரிகர்கள் கோரினர்.
அதேவேளை, இந்த உம்ரா சேவையினால் தனக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதனால் மிகுதி பணத்தை மீள செலுத்த முடியாது என குறித் உம்ரா முகவர் நிறுவன உரிமையாளர் யாத்திரிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முகவரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக குறித்த கடிதத்தின் பிரதிகள் மத விவகார அமைச்சர், 2011ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
m c a fareed Sunday, 15 May 2011 03:14 AM
உம்றாவிலும் மோசடி என்றால்....
Reply : 0 0
Mohd Rizvi Maruthamunai Qatar Sunday, 15 May 2011 08:08 PM
மார்கத்தை விளங்கிய இந்த அறிஞர்களுமா மோசடியில் ஈடுபடுகிறார்கள்? மார்க்க அறிஞர்களே பாமர மக்கள் நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அல்லாஹ்வை அவன் வழியில் பயந்து கொள்ளுங்கள் அவன் நீதி தவறாதவ.ன் நிந்திக்க பட்டவனின் துஆ அல்லாஹ்விடத்தில் நேரடியாக அங்கீகரிக்க படும் என்பதை நீங்கள்தான் எங்களுக்கு கற்று தந்தீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago