2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிய கூட்ட மண்டபம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2011 மே 19 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய கூட்ட மண்டபம் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்பட்ட கூட்ட மண்டபத்தை கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு, கூட்டுறவு அமைச்சர் எம்.எஸ்.சுபைர் திறந்து வைத்தார்.

கல்முனை கிளை கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபையின் தலைவர் ஏ.எம்.ஏ.உஷையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாட்)இ எம்.எல்.துல்கர் நயீம் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்களான ஏ.எச்.எம்.அன்ஸார், ஏ.அஸீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .