2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

'கப்புறுக்கபுறவற' (தெங்கு அபிவிருத்தி) அபிவிருத்தித் திட்டம் தொடர்பான அறிவூட்டல் கூட்டம்

Super User   / 2011 மே 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் 'கப்புறுக்கபுறவற' (தெங்கு அபிவிருத்தி) எனும் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவூட்டல் கூட்டம் இன்று காலை  நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உணவு மற்றும் போசாக்கு சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு அம்பாறை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி செய்வது எவ்வாறு, எதிர்கால திட்டங்கள், தெங்கு உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்குவது போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.தாஹீர், தெங்கு அபிவிருத்திச் சபையின் உயர் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .