2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வாய்க்கால் வழியாக செல்லும் குடிநீரை தடுத்து திசை திருப்பியதால் மக்கள் விசனம்

Kogilavani   / 2011 ஜூன் 01 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று மகாசக்திபுர பிரதேசத்திற்கு வாய்க்கால் வழியாக செல்லும் ஆற்று நீரை இடையில் தடுத்து திசை  திருப்பியதால் இப்பிரதேச மக்களின் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து தமக்கு முறையிட்டுள்ளதாகவும் ஆலையடிவேம்பு பிரதேசசபை உதவி தவிசாளர் சி. சியாம்சுந்தர் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான தண்ணீர் வாய்க்காலில் கண்ணகிபுர பிரதேசத்தின் ஊடாக  செல்கின்றது. வாய்க்கால் வழியாகச் செல்லும் ஆற்றுநீரை இடையில் சில விவசாயிகள் தடுத்து திசை திருப்பியுள்ளனர். இதனால் குடிநீரைப் பெற்றுக்கொள்ள இரண்டு மைல் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் இப் பிரதேசமக்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நீர்பாசன அதிகாரியினதும் அரசாங்க அதிபர்,  பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இப்பிரதேச மக்களுக்கான குடிநீர்தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு உடன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உதவி தவிசாளர் தெரிவித்தார்
 


You May Also Like

  Comments - 0

  • Saleem Ramees Wednesday, 01 June 2011 08:22 PM

    குடி தண்ணிரை ஏன்யா தடுக்குறாங்க??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 3