2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சாகாமக்குள புனர்நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பம்

Kogilavani   / 2011 ஜூன் 01 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள சாகாமக்குளத்தின் இடைநிறுத்தப்பட்ட புனர்நிர்மாணப் பணிகள், நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அனுசரணையுடன் ஜப்பான் அரசின் வாழ்வாதார அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சாகாமக்குள அபிவிருத்தி வேலைத்திட்டமானது கடந்த 2010 நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அணைக்கட்டு விரிவாக்கல் அளவுத்திட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இவ் வேலைத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

இதற்கான அணைக்கட்டு விரிவாக்கல் அளவுத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன்  நிதி ஒதுக்கீட்டிலும் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் குளத்தின் புனர்நிர்மாணத்திற்கான வேலைத்திட்டங்கள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 5

மன்னிப்பு

3 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 3