Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 03 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பல ஆண்டு காலமாக எதிர்நோக்கி வந்த காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேச செயலாளர் யூ.எல்.நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைஸால் காசீம், எம்.ரீ.ஹஸனலி, அமைச்சின் மேலதிக செயலாளர் அசோகா பீரிஸ், காணி ஆணையாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மிக நீண்டகாலமாக நிலவிய பொத்துவில் பிரதேச விவசாயிகளின் காணி பிரச்சனைகளை தீர்ப்பதற்காக காணி அமைச்சர் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தமை இதுவே முதற் தடவை என அப்பிரதேச விவசாயிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago