Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 19 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்ததாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த ஜெயசுரிய தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபைக்கான வேட்பாளர் பேரம்பலம் விஜயராஜா (வீரா) என்பவரும் அவரது ஆதரவாளர்கள் உட்பட நான்கு பேருமே சம்பவதினம் நள்ளிரவு 12.15 மணியளவில் திருக்கோவில் பிரதான நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்துக்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் பிரசார சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago