2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தென்னாபிரிக்க பிரஜை கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

தென்னாபிரிக்க பிரஜை ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடவுச் சீட்டு மற்றும் விஸா இல்லாத நிலையில் வீதியில் சுத்தித்திரிந்த தென்ஆபிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தொடர்பாக பொலிஸ்  தலைமையகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .