2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

சத்தியமே வாழ்க்கையாக மாறினால் சத்தியாக்கிரகம் வெல்லும்

Janu   / 2026 ஜனவரி 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு சமூகத்தில் அநீதிக்கு எதிராக மனிதன் கொண்டிருக்கும் வலிமையான மற்றும் மிகவும் தார்மீக போராட்ட முறைகளில் போராட்டம், வேலைநிறுத்தம், கிளர்ச்சி, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரதம் ஆகியன அடங்குகின்றன. தற்காலதில், இவற்றில் சில படங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

வரலாற்றில் இவை ஒருவரின் சக்தியையோ அல்லது பலத்தையோ காட்டும் முறைகளாகப் பயன்படுத்தப்படவில்லை, மாறாக அதிகாரத்தின் முகத்தில் உண்மையை முன்னிலைப்படுத்தும் தார்மீக ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1987ல் இந்திய அமைதிப்படையின் தலையீட்டைக் கண்டித்தும், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபன் மரணமடைந்தார்.

எனினும்,  இலங்கையில் இந்த போராட்ட முறைகள் பெரும்பாலும் அந்த வரலாற்று எடையை இழந்து தற்போதைய அரசியல் நலன்கள் மற்றும் ஊடக கெமராக்களை இலக்காகக் கொண்ட நிகழ்வுகளாக மாறிவிட்டன.கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக இசுருபாயா அருகே நடத்தப்பட்ட சத்தியாக்கிரகமும் அதே சமூக சூழலில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

சத்தியாக்கிரகத்திற்கு வரலாறு அளித்த அர்த்தம் மிகவும் தீவிரமானது. மகாத்மா காந்தி சத்தியாக்கிரகத்தை ஒரு எளிய போராட்டமாக அல்ல, மாறாக உண்மை மற்றும் அகிம்சையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவமாக அறிமுகப்படுத்தினார். அவர் மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்திய சமூகத்தின் வெறுப்பு, மத தீவிரவாதம் மற்றும் அரசியல் அநாகரீகத்திற்கு எதிராகவும் இயக்கப்பட்டன.

மியான்மரில்  ஜனநாயகத்திற்காகப் போராடும் ஆங் சான் சூகி மற்றும் புத்த துறவிகளின் அகிம்சைப் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் சத்தியாக்கிரகங்கள் இராணுவ அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை உலகிற்கு அம்பலப்படுத்தின. "காவி புரட்சி" என்று அழைக்கப்படும் போராட்டம் ஆயுதங்களால் அல்ல, தார்மீக வெளிப்பாட்டால் வென்றது.

திபெத்தில் நடந்த சத்தியாக்கிரகம் மற்றும் சாகும் வரையிலான உண்ணாவிரதங்கள் வரலாற்றில் மற்றொரு தீவிரமான எடுத்துக்காட்டு. சீன ஆட்சிக்கு எதிராக திபெத்திய துறவிகள் மற்றும் சாதாரண மக்கள் சுயமாகத் திணித்த உண்ணாவிரதங்கள் மற்றும் போராட்டங்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. தலாய் லாமாவின் வன்முறையற்ற சத்தியாக்கிரகத் தத்துவத்தின் கீழ், இந்தப் போராட்டங்கள், பிரதேசங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக உலகின் மனசாட்சியை எழுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

சத்தியாக்கிரகம் ஒரு நகைச்சுவையாக இருக்கும் ஒரு சமூகத்தில், உண்மையும் கல்வியும் ஒன்றாக தோற்கடிக்கப்படுகின்றன என்பதால் சத்தியமே வாழ்க்கையாக மாறும்போதுதான் சத்தியாக்கிரகம் வெல்லும் என்பதே எமது அவதானிப்பாகும்.

21.01.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .