2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

‘தேங்காய் பௌர்ணமி’

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா பன்முக கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட நாடு ஒவ்வொரு பகுதியிலும் பிரத்தியேகமான திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது உண்டு.

கர்நாடக மாநிலம், கொங்கன் பகுதியிலும் இதுபோன்ற வினோதமான முறையில் தேங்காய் உடைப்பு திருவிழா நடைபெறுகிறது.

போட்டியில் இரண்டு ஆண்கள் கலந்து கொள்கின்றனர். இருவர் கைகளிலும் தேங்காய்கள் உள்ளன. ஒருவர் தேங்காயை உள்ளங்கையில் தாங்கிப் பிடித்திருக்க, மற்றொருவர் தன் கையில் இருக்கும் தேங்காயை கொண்டு அதனை உடைக்கிறார். போட்டியாளர்களுக்கு அருகாமையில் நிற்கும் நபர்களுக்கு தேங்காய் தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் யார் அதிகமான தேங்காய்களை உடைக்கிறார்களோ, அவர்கள் மொத்த தேங்காய்களையும் பரிசாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விழாவுக்கு பெயரே ‘தேங்காய் பௌர்ணமி’ என்று வைத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .