2026 மார்ச் 07, சனிக்கிழமை

பாதுகாப்பினைப் பலப்படுத்த இந்தியா, ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை

Editorial   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ் (Sergey Lavrov) கடந்த செவ்வாய்யன்று இந்தியாவுக்கு  சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ​சந்தித்த லவ்ரோவ் அவருடன் இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவது குறித்து  பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்தவகையில் குறித்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்ய-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்துவது குறித்தும் இந்தியப் பிரதமர் மோடியின்  மேக் -ன்- இந்தியா இனிசியேடிவ் (make-in-India initiative) திட்டத்தின் கீழ் அதிகளவு  ரஷ்ய இராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சீனாவுடன் எந்தவித இராணுவ கூட்டணி ஒப்பந்தமும் மேற்கொள்ளும் திட்டம் ரஷ்யாவிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .