Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெப்டன் விஜயகாந்த் இல்லாத தாக்கம் தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்தவரைக்கும் கட்சியை தூக்கி நிறுத்தும் வேலைகளில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், கட்சியின் பலத்தை பொறுத்து எங்கெல்லாம் சிறப்புக் கவனமெடுத்து வேட்பாளர்களை நிறுத்துவது என்பதற்கான கள ஆய்வு இப்போது தேமுதிக வட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தென் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர், “மக்களவைத் தேர்தலில் நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்த விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை உட்பட 2 தொகுதிகளிலும் மதுரையில், மதுரை மத்தி உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் இம்முறை தேமுதிக போட்டியிடும். பிரேமலதாவை அருப்புக்கோட்டையில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
“அங்கு இல்லாவிட்டால் அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடலாம்.
விஜய பிரபாகரன் சட்டமன்றத் தேர்தலுக்கு வரமாட்டார். அவர் மீண்டும் மக்களவைத் தேர்தலில் அதே விருதுநகரில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.
“ ஜனவரியில் தேமுதிக பொதுக்குழு கூடுகிறது. அப்போது விஜய பிரபாகரனுக்கு மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம். அதற்கு முன்னதாக, கேப்டன் மறைவு தினத்தையொட்டி, டிசம்பரில் சென்னையில் பிரம்மாண்டமான அமைதிப் பேரணியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
24 minute ago
52 minute ago