A.K.M. Ramzy / 2021 ஜூலை 01 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலத்தில் வியாழக்கிழமை இன்றுகாலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று வியாழக்கிழமை காலை 7.07 மணியளவில் மகாரஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று இரவு 21:35 மணியளவில் பால்கர் பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .