2026 மார்ச் 19, வியாழக்கிழமை

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி

Freelancer   / 2026 மார்ச் 19 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உளவுத்​துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​துள்​ளார். மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்​கர் பஸ்​டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகளுக்​கும், ஈரானுக்​கும் இடை​யில் கடந்த பெப்​ர​வரி 28 ஆம் திகதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால், வளை​குடா நாடு​களிடையே பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. 

இந்​நிலை​யில், இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் கொல்​லப்​பட்​ட​தாக, இஸ்​ரேலின் பாது​காப்​புத் துறை அமைச்​சர் இஸ்​ரேல் கட்ஸ் நேற்று (18) அறி​வித்​துள்​ளார். இதை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X