Freelancer / 2022 ஒக்டோபர் 09 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக்-இன்-இந்தியா' பிரச்சாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், சில எயார்போட்கள் மற்றும் பீட்ஸ் ஹெட்ஃபோன்களின் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுமாறு அப்பிள் அதன் வழங்குநர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
எயார்போட்ஸ் மற்றும் பீட்ஸ் ஹெட்போன் தயாரிப்பை இந்தியாவுக்கு மாற்றுமாறு அப்பிள் கேட்ட்டுக் கொண்டமை இதுவே முதல் முறை என்று நிக்கி ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உயர முயற்சிப்பதால், இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் கடுமையான பூச்சிய கொவிட் கொள்கை மற்றும் அமெரிக்காவுடனான பதட்டங்களிலிருந்து உருவாகும் விநியோகச் சங்கிலி இடையூறுகளின் அபாயத்தைக் குறைக்க அப்பிள் சீனாவிலிருந்து விலகிச் செல்வதாகவும் இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
ஐபோன் பொருத்துநரான ஃபொக்ஸ்கான் நிறுவனம் பீட்ஸ் ஹெட்ஃபோன்களை உருவாக்கத் தயாராகி வருவதுடன், இறுதியில் எயார்போட்களை அங்கே தயாரிக்கும் என்று நம்புவதாக நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது.
வியட்நாம் மற்றும் சீனாவில் எயார்போட்களை உற்பத்தி செய்யும் லக்ஸ்ஷேர் ப்ரிசிஷன் இண்டஸ்ட்ரி மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இந்தியாவில் பிரபலமான வயர்லெஸ் இயர்போன்களை உருவாக்க அப்பிள் நிறுவனத்திற்கு உதவ திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி நிக்கி ஏசியா தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க-சீனா வர்த்தகப் போரின் வீழ்ச்சிக்கு மத்தியில், 2019 இல், எயார்போட்களின் உற்பத்தி வியட்நாமுக்கு மாற்றப்பட்டதுடன், சீனாவுக்கு வெளியே பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆரம்ப அப்பிள் தயாரிப்புகளில் ஒன்றாக மாறியது.
ஒவ்வொரு ஆண்டும் 70 மில்லியனுக்கும் அதிகமான அலகுகள் அனுப்பப்படுகின்றன, ஏற்றுமதி அளவின் அடிப்படையில் அப்பிள் தயாரிப்புகளில் ஐபோனுக்கு அடுத்தபடியாக உள்ளன.
பீட்ஸ் உற்பத்தியின் பெரும்பகுதி கடந்த ஆண்டு முதல் வியட்நாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிக்கி ஏசியா குறிப்பிட்டுள்ளது.
ஐபோன் ஏற்கனவே அங்கு தயாரிக்கப்படுகிறது என்ற சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, எயார்போட்கள் மற்றும் பீட்ஸ் தயாரிப்பை இந்தியாவுக்கு கொண்டு வருவதால் நாட்டில் அப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி தடம் விரிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
19 minute ago
23 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
37 minute ago
46 minute ago