Ilango Bharathy / 2022 டிசெம்பர் 27 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘தினமும் இரண்டு கோப்பைகளோ அல்லது அதற்கு மேலாகவோ கோப்பி அருந்தினால் இதய நோயால் இறக்கும் அபாயம் இரட்டிப்பாகலாம்‘ என மருத்துவ ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு கோப்பியின் நேர்மறையான விளைவுகள் பொருந்துமா? அவர்கள் மீது கிரீன் டீயின் தாக்கம் என்ன? என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ் ஆய்வின் முடிவுகளை 'அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' என்ற இதழானது அமையில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, உயர் இரத்த அழுத்தம் அதாவது 160/100 mmHg அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் கோப்பி அருந்துவதால், இதய நோயால் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026