Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் அனுடின் சர்விரகுல்லின் பூம்ஜைதை கட்சி தெளிவாக வெற்றி பெற்றுள்ளது.
கம்போடியாவுடனான எல்லைச் சண்டையின்போது டிசெம்பர் நடுப்பகுதியில் இடைத் தேர்தலை பிரதமர் அனுடின் அறிவித்திருந்தார்.
ஏறத்தாழ 95 சதவீதமான வாக்களிப்பு நிலையங்கள் தகவல் அளித்தபடி தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட ஆரம்ப முடிவுகளில் 192 ஆசனங்கணை பூம்ஜைதை கட்சி வெல்லவுள்ளது. இதேவேளை மக்களின் கட்சி 117 ஆசனங்களையும், ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய பெயு தாய் கட்சி 74 ஆசனங்களைப் பெறவுள்ளது.
500 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஏனைய கட்சிகள் இணைந்து 117 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago