2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

மொஸ்கோவில் சுடப்பட்ட ரஷ்ய புலனாய்வு அதிகாரி

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 07 , பி.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள தனது அடுக்குமாடிக் கட்டடதில் ரஷ்ய இராணுவ புலனாய்வின் பிரதித் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸெயெவ் சுடப்பட்டு, வைத்தியசாலைக்கு வெள்ளிக்கிழமை (06) கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடையாளந் தெரியாத துப்பாகிதாரியொருவர் அலெக்ஸ்யெவ் மீது சில வேட்டுக்களைத் தீர்த்து விட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மோசமான நிலையில் வைத்தியசாலையில அலெக்ஸ்யெவ் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X