2025 மே 17, சனிக்கிழமை

ரொனால்டோவின் குடும்பத்தினருக்காக மூடப்பட்ட ’தீம் பார்க்`

Ilango Bharathy   / 2023 ஜனவரி 19 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ,தனது  குடும்பத்தினருடன் பொழுதுபோக்குவதற்காக சவுதி அரேபியாவிலுள்ள தீம் பார்க் ஒன்றுக்குள்  2 மணி நேரம் வெளிநபர்கள் செல்லத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அல் நஸ்ர் கிளப்பிற்கு இரண்டரை ஆண்டுகள் விளையாட 4 ,400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான ரொனால்டோ, தனது பெண் தோழி ஜார்ஜினாமற்றும் அவர்களது 4 குழந்தைகளுடன் சவுதிக்கு இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில் அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பொழுதினைப் போக்குவதற்காக  ரியாத்திலுள்ள குறித்த பூங்காவானது  2 மணி நேரம் வரை  மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் திருமணமாகாத ஆண், பெண் சேர்ந்து வாழ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரொனால்டோவிற்கு மாத்திரம்  பிரத்யேகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .