2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

Freelancer   / 2026 மார்ச் 27 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. 

இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இராணுவத்​துக்கு இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கச்சா எண்​ணெய், எல்.​பி.ஜி. எரிபொருள் கொண்டு செல்​லும் கப்​பல்​கள் செல்ல தடை விதிக்​கப்​பட்​டிருந்​தது. ஒரு சில கப்​பல்​கள் மீது ஈரான் ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் நூற்​றுக்​கணக்​கான சரக்கு கப்​பல்​கள் அங்கு காத்​துக் கிடந்​தன.

இந்​திய கப்​பல்​களுக்கு அனு​மதி வழங்​கும்​படி ஈரான் அரசுடன் இந்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இதே​போல, ஈரானின் நட்பு நாடு​களும் பேச்​சு​ நடத்தின. இதையடுத்து இந்​தி​யா, பாகிஸ்​தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடு​களின் கப்​பல்கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ஈரான் வெளி​யுறவுத் ​துறை அமைச்சர் சையத் அப்​பாஸ் அராக்சி கூறும்போது, ஈரான் போர் சூழலில் உள்​ளது. மேற்கு ஆசியா போர்க்​கள​மாக உள்​ளது. இதனால், இங்கு எதிரி நாடு​களின் கப்​பல்​கள் செல்ல அனு​ம​திக்க முடி​யாது. மற்​றவர்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி திறந்​தே உள்​ளது என்​றார்​. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .