2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்

Freelancer   / 2026 மார்ச் 29 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி நேற்று ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை  தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடங்கியதிலிருந்து ஹவுதிகள் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நெகேவில் உள்ள பீர்ஷேபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன எனவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் நேரடித் தாக்கங்கள் குறித்த உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .