2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது புத்தூர் வளர்மதி அணி

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 09 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.கண்ணன்

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்திய, யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட தொடரில், “பி” பிரிவில், புத்தூர் வளர்மதி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

மின்னொளியில் கடந்த வாரயிறுதியில் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது.

முதல் இரு செட்களிலும் பலத்த ஆதிக்கம் செலுத்திய வளர்மதி அணி 25-18, 25-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிரண்டு செட்களிலும் வெற்றிபெற்றது. ஆனால், மூன்றாவது செட்டில் நவஜீவன்ஸ் அணி 25-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனினும், நான்காவது செட்டில், புத்தூர் வளர்மதி அணி 25-22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3:1 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

இறுதிப் போட்டியின் நாயகனாக புத்தூர் வளர்மதி அணியை சேர்ந்த புவிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .