2025 நவம்பர் 19, புதன்கிழமை

நான்காவது சுற்றில் மணற்காடு சென். அன்ரனிஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 30 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தனது மைதானத்தில் நடாத்தி வரும் இவ்வருடத்துக்கான வட மாகாண வல்லவன் தொடரின் நான்காவது சுற்றுக்கு மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றே சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம், நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியில், சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக சுஜீபன் மூன்று கோல்களையும் அலெக்ஸ் ஒரு கோலினையும் பெற்றனர். யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக பெறப்பட்ட கோலை றமணன் பெற்றிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாகத் தெரிவான சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் சுஜீபனுக்கான பதக்கத்தினை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் அணிவித்திருந்ததுடன், வெற்றி பெற்ற அணியான சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்துக்கான பணப்பரிசினையும் வழங்கி வைத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X