2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் சென்றது மன்னார் வலயக்கல்விப்பணிமனை

Super User   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகர சபை உத்தியோகஸ்தர் நலன்புரிசசங்கம் ஏற்பாடு செய்திருந்த 2014 ஆம் ஆண்டிற்காண நகர முதல்வர் வெற்றிக்கிண்ணத்திற்கான அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இருதி நிகழ்வுகள் புதன்கிழமை (02) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

கடந்த இரு வாரங்களாக குறித்த போட்டி இடம் பெற்று வந்தது. புதன்கிழமை (02) இடம் பெற்ற இருதிச் சுற்றில் மன்னார் வலயக்கல்விப்பணிமனை அணி மற்றும் மன்னார் பிரதேச செயலக அணி ஆகியன  தகுதி பெற்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மன்னார் வலயக்கல்விப்பணிமனை அணி முதல் கலத்துடுப்பை தெரிவு செய்தது.

இதன் போது மன்னார் பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 7 இழக்குகளை இழந்து 71 ஓட்டங்களைப்பெற்றது.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய மன்னார் வலயக்கல்வி பணிமனை அணி 9.3 பந்துப்பரிமாற்றங்களுக்கு  4 இழக்குகளை இழந்து 74 ஓட்டங்களைப்பெற்று வெற்றிப்பெற்றுள்ளது.

அதிகூடிய ஓட்டமாக மன்னார் கல்விப்பணிமனை அணியின் தலைவர் எம்.சி றம்சீன் 32 ஓட்டங்களை பெற்றார்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கேடையங்களை மன்னார் நகர சபைத்தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் வழங்கி வைத்தார்.

இதன் போது மன்னார் நகர சபை உறுப்பினர்கள், உப தலைவர், நகர சபை செயலாளர், நகர சபை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிபடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X