Ilango Bharathy / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிகளில் நிலவும், குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வைத்திய அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கிணங்க, இராணுவத்தின் 242ஆவது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு கோமாரி பிரதேசத்தில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் குறித்த படைப்பிரிவின், கட்டளை அதிகாரி பிரிகேடியர் டீ.சி.பீரிஸ், சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜானக விஜயரத்ன, வைத்தியர் டீ.என்.எம்.தர்மதிலக மற்றும் டொக்டர் எஸ்.பெர்ணான்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், மற்றும் இராணுவ வீரர்கள் என 74 பேர் இரத்தம் தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago